article by Teachers
Showing posts with label கர்ம வீரர் காமராஜர். Show all posts
Showing posts with label கர்ம வீரர் காமராஜர். Show all posts
Wednesday, 15 July 2015
கர்ம வீரர் காமராஜர்
கர்ம வீரர் காமராஜர்
முழங்கால் தொடும் உன் கைகள் !
உன் கொள்கையைப் பற்றினால்
வான் தொடும் எங்கள் கைகள் !
கருமேகமோ உன் முகம்
கறைபடிய வில்லை உந்தன் குணம் !
சோறு போட்டு தந்தாய் கல்வி
சோர்வதில்லை தோல்வி கண்டு நீ தல்லி !
கர்ம வீரர் காமராஜர் நீ
என்றும் தோல்வி அடைய பேரரசர் !
ரா . சந்தியா
X - அ
முழங்கால் தொடும் உன் கைகள் !
உன் கொள்கையைப் பற்றினால்
வான் தொடும் எங்கள் கைகள் !
கருமேகமோ உன் முகம்
கறைபடிய வில்லை உந்தன் குணம் !
சோறு போட்டு தந்தாய் கல்வி
சோர்வதில்லை தோல்வி கண்டு நீ தல்லி !
கர்ம வீரர் காமராஜர் நீ
என்றும் தோல்வி அடைய பேரரசர் !
ரா . சந்தியா
X - அ
கர்ம வீரர் காமராஜர்
விருதுப்பட்டியில் முளைத்த விதையாய்
வெடித்துச் சிதறிய மண்ணில்
வேரூன்றிய திங்கள் மகனாய்
எளிமையில் பிறந்து வறுமையில்
பயின்ற கல்வியை ஆறாம்
படை வீட்டில் தடைபட்ட
அறிவுக் கூட்டைத் தாண்டி
உழைப்பின் நாயகனாய்
உண்மைத் தோழனாய் நாடே வீடு
நம் தேசமே குடும்பம் என்று
ஆங்கிலேய அன்பர்களை அறவே ஒழிக்க
அறவழிப் போரும் மதுக் கடை
மறியலும் தீண்டாமை ஒழிப்பும்
ஒத்துழையாமை இயக்கமும்
நடந்த போரில் தாமும் கலந்து
சிறைப் பட்ட சிங்கமாய்
ஏழைப் பங்காளராய்
ஏழை மாணவர்களுக்கு
விடியும் கல்விக் கண்னை
விதைத்த அறிவுப் பெட்டகமே
நீ படிக்காத மேதையாய்
இருந்தும் பஞ்சம் பசி தீர்த்த
கர்ம வீரராய் காலம் வைத்த பெயரில்
கருப்பு காந்தியாய் மாறி
அணைகள் பல கட்டி
அகிலம் செழிக்க மனைகள் தோறும்
மண்ணில் கலந்த சிமென்டாய் மாறி
நலமும் வளமும் சிறக்க
காகித ஆலைகள் கட்டி
மக்கள் வளம் உயர
தரைவழி கடல் வழி
சாலையில் தன் உயிர்
வழி தந்த ஆட்சியில்
அணையா விளக்காய்
அமைதியின் சொருபமாய்
உறங்குகிறாய் நம் அன்னை மடியில்......!!!
சி.பொன்செல்வி
12th -B..
வெடித்துச் சிதறிய மண்ணில்
வேரூன்றிய திங்கள் மகனாய்
எளிமையில் பிறந்து வறுமையில்
பயின்ற கல்வியை ஆறாம்
படை வீட்டில் தடைபட்ட
அறிவுக் கூட்டைத் தாண்டி
உழைப்பின் நாயகனாய்
உண்மைத் தோழனாய் நாடே வீடு
நம் தேசமே குடும்பம் என்று
ஆங்கிலேய அன்பர்களை அறவே ஒழிக்க
அறவழிப் போரும் மதுக் கடை
மறியலும் தீண்டாமை ஒழிப்பும்
ஒத்துழையாமை இயக்கமும்
நடந்த போரில் தாமும் கலந்து
சிறைப் பட்ட சிங்கமாய்
ஏழைப் பங்காளராய்
ஏழை மாணவர்களுக்கு
விடியும் கல்விக் கண்னை
விதைத்த அறிவுப் பெட்டகமே
நீ படிக்காத மேதையாய்
இருந்தும் பஞ்சம் பசி தீர்த்த
கர்ம வீரராய் காலம் வைத்த பெயரில்
கருப்பு காந்தியாய் மாறி
அணைகள் பல கட்டி
அகிலம் செழிக்க மனைகள் தோறும்
மண்ணில் கலந்த சிமென்டாய் மாறி
நலமும் வளமும் சிறக்க
காகித ஆலைகள் கட்டி
மக்கள் வளம் உயர
தரைவழி கடல் வழி
சாலையில் தன் உயிர்
வழி தந்த ஆட்சியில்
அணையா விளக்காய்
அமைதியின் சொருபமாய்
உறங்குகிறாய் நம் அன்னை மடியில்......!!!
சி.பொன்செல்வி
12th -B..
கர்ம வீரர் காமராஜர்
அரச குடும்பத்தில் பிறக்கவில்லையென்றாலும் அரசாண்டவர் ,
விருதுநகரிலே பிறந்து - பல விருதுகளை வாங்கிக் குவித்தவர்,
படித்துப் பட்டம் பெறவில்லை - ஆனால் எண்ணில்லடங்காப் பட்டங்களுக்குச் சொந்தகாரர் ,
உள்நாட்டை அதிகம் நேசித்ததாலோ - அவரின் பெயரில் சென்னை உள் நாட்டு விமான நிலையம்!
கஞ்சிக் குடிக்க வழியில்லையென்றாலும் - பல மொழிகளைக் கரைத்துக் குடித்தவர்.
கர்மமே தனது குறிக்கோள் எனப் போராடியதால் அவர் கர்மவீரர் ,
''ராசா'' சிறுவயதில் தாயார் அன்பாக அழைத்தது,
''ராஜா'' பெருவயத்தில் மக்கள் அன்பாக அழைத்தது .
பிறந்த குலமோ நாடார், அதற்கேற்ப எதையும் நாடவில்லை,
அவர், தீ யென - யாரையும் நாடார்,
என்றும் - சிறுமைகள் நாடார் ,
வாழ்வில் - மாயங்கள் நாடார் ,
வெற்று - மந்திரங்கள் நாடார் ,
வரட்டு - வார்த்தைகள் நாடார் ,
வாழ்க்கைப் பாதையோ ,
ஒன்றே மணம் ,
ஒன்றே எண்ணம் ,
ஊருக்கே வாழ்ந்த வாழ்கை,
திருமணம் அறியாதவர் , பருவம், காதல், பாசம் - மறந்து,
சீராட்டிப் , பாராட்டிய தாய் தவிர சொந்தம் என்று சொல்ல யாருமில்லை , துணையிருக்க மங்கையுமில்லை ,
மணிமண்டபங்கள் தோட்டங்கள் ஏதுமில்லை ,
பொதுவாழ்விலோ நேர்மை , தூய்மை .
தனக்கு கிடைக்காத கல்வி தமிழ்நாட்டுப்
பிள்ளைகளுக்குக் கிடைக்க ஊர் ஊராய் பள்ளிகள் .
ஏதுமறியாதவன் ஆடுகிறான் ,
எல்லாம் அறிந்தவன் அடங்கிக் கிடக்கிறான், என்பதற்கு
எடுத்துக் காட்டாய் விளங்கியவர் காமராசர்
இல்லாமை இல்லாத சமுதாயத்தை உருவாக்கி
மக்கள் மனதில் என்றும் வாழ்பவர் காமராசர்.
பி.வெ .கணேஷ் .
12th - B.
விருதுநகரிலே பிறந்து - பல விருதுகளை வாங்கிக் குவித்தவர்,
படித்துப் பட்டம் பெறவில்லை - ஆனால் எண்ணில்லடங்காப் பட்டங்களுக்குச் சொந்தகாரர் ,
உள்நாட்டை அதிகம் நேசித்ததாலோ - அவரின் பெயரில் சென்னை உள் நாட்டு விமான நிலையம்!
கஞ்சிக் குடிக்க வழியில்லையென்றாலும் - பல மொழிகளைக் கரைத்துக் குடித்தவர்.
கர்மமே தனது குறிக்கோள் எனப் போராடியதால் அவர் கர்மவீரர் ,
''ராசா'' சிறுவயதில் தாயார் அன்பாக அழைத்தது,
''ராஜா'' பெருவயத்தில் மக்கள் அன்பாக அழைத்தது .
பிறந்த குலமோ நாடார், அதற்கேற்ப எதையும் நாடவில்லை,
அவர், தீ யென - யாரையும் நாடார்,
என்றும் - சிறுமைகள் நாடார் ,
வாழ்வில் - மாயங்கள் நாடார் ,
வெற்று - மந்திரங்கள் நாடார் ,
வரட்டு - வார்த்தைகள் நாடார் ,
வாழ்க்கைப் பாதையோ ,
ஒன்றே மணம் ,
ஒன்றே எண்ணம் ,
ஊருக்கே வாழ்ந்த வாழ்கை,
திருமணம் அறியாதவர் , பருவம், காதல், பாசம் - மறந்து,
சீராட்டிப் , பாராட்டிய தாய் தவிர சொந்தம் என்று சொல்ல யாருமில்லை , துணையிருக்க மங்கையுமில்லை ,
மணிமண்டபங்கள் தோட்டங்கள் ஏதுமில்லை ,
பொதுவாழ்விலோ நேர்மை , தூய்மை .
தனக்கு கிடைக்காத கல்வி தமிழ்நாட்டுப்
பிள்ளைகளுக்குக் கிடைக்க ஊர் ஊராய் பள்ளிகள் .
ஏதுமறியாதவன் ஆடுகிறான் ,
எல்லாம் அறிந்தவன் அடங்கிக் கிடக்கிறான், என்பதற்கு
எடுத்துக் காட்டாய் விளங்கியவர் காமராசர்
இல்லாமை இல்லாத சமுதாயத்தை உருவாக்கி
மக்கள் மனதில் என்றும் வாழ்பவர் காமராசர்.
பி.வெ .கணேஷ் .
12th - B.
கர்ம வீரர் காமராஜர்
வெள்ளைக் கதருக்குள்
கருப்பாய் ஒரு
பச்சைத் தமிழன்!
நீ கல்விச் சாலையில் கற்றதோ
கை மண்ணளவு! - ஆனால்
கல்விச் சாதனையில்
கடந்ததோ கடலளவு!
விருது நகரின் விழுது!
வெள்ளந்தி மனது!
நீ சம்சாரக் கடலில்
மூழ்காத கட்டை பிரம்மசாரி!
பந்தமும் இல்லை! - உன்னிடம்
பந்தாவும் இல்லை!
நீ
ஏழைக் குழந்தைகளுக்குக்
கூட்டானவன்! - ஆனால்
ஏட்டுச் சுரைக்கய்களுக்கு
வேட்டானவன்!
பல அணைகளைப்
பரிசாகத் த்தந்தவன்! - பல
பாலங்கள் கட்டத் தானே
பாலமாய் இருந்தவன்!
அறம் பேசிய உன் வாய்
புறம் பேசியதில்லை!
அடுக்கு மொழி அறியா உன் நாக்கு - என்றும்
தடம் புரண்டதில்லை!
வெட்டும் துண்டும் உன்
வார்த்தையில் மட்டும் தான்!
வாழ்க்கையில் இல்லை!
நீ
செவிக்கும் வயிற்றுக்கும்
சேர்த்தே ஈய்ந்தவன் !
சமூக நீதிக்கே சருக்காய்த் தேய்ந்தவன்!
உன்னிடம்
வார்த்தை ஜாலமும் கிடையாது !
உனக்கு
வாரிச் சுருட்டவும் தெரியாது!
நீ
விடியலுக்கு வித்து!
விண்ணுக்கு சொத்து!
நீ
கையூட்டு பெறும்
அரசியல்வாதிகள்
தொடக்கூடாத கையேடு!
நீ
ஒரு நாளும்
தலை தாழ்ந்ததில்லை!
அதனால் தானோ என்னவோ
உம்மைத் தோற்கடிக்க நாங்கள்
இன்னமும் தலை நிமிரவே இல்லை!
கருப்பாய் ஒரு
பச்சைத் தமிழன்!
நீ கல்விச் சாலையில் கற்றதோ
கை மண்ணளவு! - ஆனால்
கல்விச் சாதனையில்
கடந்ததோ கடலளவு!
விருது நகரின் விழுது!
வெள்ளந்தி மனது!
நீ சம்சாரக் கடலில்
மூழ்காத கட்டை பிரம்மசாரி!
பந்தமும் இல்லை! - உன்னிடம்
பந்தாவும் இல்லை!
நீ
ஏழைக் குழந்தைகளுக்குக்
கூட்டானவன்! - ஆனால்
ஏட்டுச் சுரைக்கய்களுக்கு
வேட்டானவன்!
பல அணைகளைப்
பரிசாகத் த்தந்தவன்! - பல
பாலங்கள் கட்டத் தானே
பாலமாய் இருந்தவன்!
அறம் பேசிய உன் வாய்
புறம் பேசியதில்லை!
அடுக்கு மொழி அறியா உன் நாக்கு - என்றும்
தடம் புரண்டதில்லை!
வெட்டும் துண்டும் உன்
வார்த்தையில் மட்டும் தான்!
வாழ்க்கையில் இல்லை!
நீ
செவிக்கும் வயிற்றுக்கும்
சேர்த்தே ஈய்ந்தவன் !
சமூக நீதிக்கே சருக்காய்த் தேய்ந்தவன்!
உன்னிடம்
வார்த்தை ஜாலமும் கிடையாது !
உனக்கு
வாரிச் சுருட்டவும் தெரியாது!
நீ
விடியலுக்கு வித்து!
விண்ணுக்கு சொத்து!
நீ
கையூட்டு பெறும்
அரசியல்வாதிகள்
தொடக்கூடாத கையேடு!
நீ
ஒரு நாளும்
தலை தாழ்ந்ததில்லை!
அதனால் தானோ என்னவோ
உம்மைத் தோற்கடிக்க நாங்கள்
இன்னமும் தலை நிமிரவே இல்லை!
மோ.தாரணி
பனிரெண்டாம் வகுப்பு - ஆ பிரிவு
எஸ்.ஆர்.எம் நைட்டிங்கள் மெட்ரிக் மேனிலைப் பள்ளி.
சென்னை - 600 033
கர்மவீரர் காமராஜர் பிறந்த தினம் - இன்று
உன் பெயரோ காமராஜ் !
நீயோ தமிழ் நாட்டின் சாம்ராட்!
கருணையில் நீ ஒரு புத்தர் - உன்
தொலைநோக்கிலோ நீ ஒரு சித்தர்!
முன்னேற்றம் பலவிற்கும் நீயே காரணகர்த்தர்.
ஏழை மனக்குறிப்பறியும் நல வித்தகர்
நீ பிறந்ததோ ஜூலை பதினைந்து
சேவைகள் பல செய்தாய் மனமுவந்து!
உன் சேவைகளை நினைந்து
உன் மேல் பாட வந்தேன் சிந்து!
மக்கள் நலன் பல விழைந்து
அவரின் துயர் பல கலைந்து
வெளியிட்டாய் பல ஜி.ஒ.
பட்டறிவால் அறிந்தாய் Geo
அதனால் உண்டானது பல அணை
கடவுள்போல் மக்களுக்கானாய் துணை!
ஐம்பூதங்களிலும் உன் ஆட்சி!
விண்ணைத் தாண்டும் உன் மாட்சி!
நீரை அடக்கினாய் அணையினால்!
மின் சக்தி பெற வைத்தாய் அனலினால்!
காற்றில் கலந்த சுகந்தமானாய் !
நிலத்திலடங்கினாலும் விண்ணுக்கு ஒப்பானாய்!
வாழ்த்த வேண்டிய அவசியமில்லை!
தன்னால் வளர்கிறது உன் புகழ்!
நெஞ்சம் நிமிர்ந்திடத் திகழ்!
என்றென்னை வாழ்த்திட வேண்டும் உன் இதழ்!
உன் வழியில் என்றும் நாங்கள்
வளர்ந்து வாழ்ந்திட வேண்டும் பல காலங்கள்!
வாழ்த்துவாய் எம்மை!
வளர்த்துவோம் உம் பெருமை!
சொல்லிலடங்கா உன் சேவைகளை
பட்டியலிட முயன்று
முடியாததால் முடிக்கின்றேன் நான் முத்தாரம்!
நீயோ தமிழ் நாட்டின் சாம்ராட்!
கருணையில் நீ ஒரு புத்தர் - உன்
தொலைநோக்கிலோ நீ ஒரு சித்தர்!
முன்னேற்றம் பலவிற்கும் நீயே காரணகர்த்தர்.
ஏழை மனக்குறிப்பறியும் நல வித்தகர்
நீ பிறந்ததோ ஜூலை பதினைந்து
சேவைகள் பல செய்தாய் மனமுவந்து!
உன் சேவைகளை நினைந்து
உன் மேல் பாட வந்தேன் சிந்து!
மக்கள் நலன் பல விழைந்து
அவரின் துயர் பல கலைந்து
வெளியிட்டாய் பல ஜி.ஒ.
பட்டறிவால் அறிந்தாய் Geo
அதனால் உண்டானது பல அணை
கடவுள்போல் மக்களுக்கானாய் துணை!
ஐம்பூதங்களிலும் உன் ஆட்சி!
விண்ணைத் தாண்டும் உன் மாட்சி!
நீரை அடக்கினாய் அணையினால்!
மின் சக்தி பெற வைத்தாய் அனலினால்!
காற்றில் கலந்த சுகந்தமானாய் !
நிலத்திலடங்கினாலும் விண்ணுக்கு ஒப்பானாய்!
வாழ்த்த வேண்டிய அவசியமில்லை!
தன்னால் வளர்கிறது உன் புகழ்!
நெஞ்சம் நிமிர்ந்திடத் திகழ்!
என்றென்னை வாழ்த்திட வேண்டும் உன் இதழ்!
உன் வழியில் என்றும் நாங்கள்
வளர்ந்து வாழ்ந்திட வேண்டும் பல காலங்கள்!
வாழ்த்துவாய் எம்மை!
வளர்த்துவோம் உம் பெருமை!
சொல்லிலடங்கா உன் சேவைகளை
பட்டியலிட முயன்று
முடியாததால் முடிக்கின்றேன் நான் முத்தாரம்!
Subscribe to:
Posts (Atom)