Friday, 17 July 2015

மாண்புமிகு முந்திரி

17.07.2015 - World Day for International Justice

Image result for justice day
World Day for International Justice, also referred to as Day of International Criminal Justice or International Justice Day is celebrated throughout the world on July 17 as part of an effort to recognize the emerging system of international criminal justice. July 17 was chosen because it is the anniversary of the adoption of the Rome Statute, the treaty that created the International Criminal Court. On 1 June 2010, at the Review Conference of the Rome Statute held in Kampala (Uganda), the Assembly of State Parties decided to celebrate 17 July as the Day of International Criminal Justice. 

Each year, people around the world use this day to host events to promote international criminal justice, especially support for the International Criminal Court. The day has been successful enough to attract international news attention, and for groups to use the day to focus attention on particular issues such as genocide in Darfur, Falun Dafa, and serious crimes of violence against women. 


Note : The International Court of Justice (French: Cour internationale de justice; commonly referred to as the World Court or ICJ) is the primary judicial branch of the United Nations. It is based in the Peace Palace in The Hague, Netherlands.

Thursday, 16 July 2015

Fun corner

The following is an article from a book "The Candle- Zonal railway Institute Tiruchhirapalli" - which stimulates laughing. But actually it reveals the computer illiteracy of a man. Even we have computer we don't use it proper. If we don't take steps for improving our computer literacy our life incidents with computer will end as comedy. 

Dear Mr. Bill gates,
                This letter is from Banta Singh from Punjab. We have bought a computer for our Home and we found problems, Which  I want to bring to your notice.

1. After connecting to internet we planned to open e-mail account and whenever we fill the form in Hot mail in the password column, only ****** appears, But in the rest of the fields whatever we typed appears, but we face this problem only in password field. We checked with hardware vendor Santa Singh and he said that there is no problem in keyboard. Because of this we open the E-mail account with password *****. I request you to check this as we ourselves do not know what the password is. 

2. We are unable to enter anything enter we click the "shut down" button.

3. There is a button "start" But there is no "stop" button. We request you to check this.

4. We find there is "run" in the menu. One of my friend clicked "run" has ran to Amritsar! So, We request you to change that to "sit", So that we can click that by Sitting.

5. One doubt is that any "Re-Scooter" Available in system? As i find only "Re-cycle", But i own a scooter at my home. 

6. There is "find" button but it is not working properly. My wife lost the door key and we tried a lot for tracing the key with this "find", But it is unable to Trace. I sit a bug??

7. Every night i am not sleeping as i have to protect my "mouse" From CAT, So, i suggest you to provide one DOG to kill that cat.

8. Please confirm when are you going to give me money for winning "HEARTS" (playing cards in Games) And when are you coming to my home to collect your money.

9. My child learnt "Microsoft Word" Now he wants to learn "Microsoft Sentence" so when will you provide that?

Best regards,
Banta Singh




Wednesday, 15 July 2015

கர்ம வீரர் காமராஜர்

article by Teachers

கர்ம வீரர் காமராஜர்

                                                  கர்ம வீரர்  காமராஜர்

                           
                                   முழங்கால்  தொடும்  உன்  கைகள் !
                                               
                                               உன்  கொள்கையைப்  பற்றினால்

                                    வான் தொடும்  எங்கள்  கைகள் !

                                                 கருமேகமோ  உன்  முகம்

                                       கறைபடிய  வில்லை  உந்தன்  குணம் !

                                                    சோறு  போட்டு  தந்தாய்  கல்வி

                                      சோர்வதில்லை  தோல்வி கண்டு  நீ  தல்லி !

                                                       கர்ம  வீரர்  காமராஜர்   நீ

                                          என்றும்   தோல்வி  அடைய   பேரரசர் !                        

                                                                                                                          ரா . சந்தியா
                                                                                                                                 X - அ                                       

கர்ம வீரர் காமராஜர்

Article by S.Ajay

கர்ம வீரர் காமராஜர்

விருதுப்பட்டியில் முளைத்த  விதையாய்
வெடித்துச்  சிதறிய மண்ணில்
வேரூன்றிய திங்கள் மகனாய்

எளிமையில் பிறந்து வறுமையில்
பயின்ற கல்வியை ஆறாம்
படை வீட்டில் தடைபட்ட
அறிவுக்  கூட்டைத்  தாண்டி

உழைப்பின் நாயகனாய்
உண்மைத்  தோழனாய் நாடே வீடு
நம் தேசமே குடும்பம் என்று
ஆங்கிலேய அன்பர்களை அறவே ஒழிக்க

அறவழிப் போரும் மதுக்  கடை
மறியலும் தீண்டாமை ஒழிப்பும்
ஒத்துழையாமை இயக்கமும்
நடந்த போரில் தாமும் கலந்து
சிறைப்  பட்ட சிங்கமாய்

ஏழைப்  பங்காளராய்
 ஏழை மாணவர்களுக்கு
விடியும் கல்விக் கண்னை
விதைத்த அறிவுப் பெட்டகமே

நீ படிக்காத மேதையாய்
இருந்தும் பஞ்சம் பசி தீர்த்த
கர்ம வீரராய்  காலம் வைத்த பெயரில்
கருப்பு காந்தியாய் மாறி

அணைகள் பல கட்டி
அகிலம் செழிக்க மனைகள் தோறும்
மண்ணில் கலந்த சிமென்டாய் மாறி
நலமும் வளமும் சிறக்க

காகித ஆலைகள் கட்டி
மக்கள் வளம் உயர
தரைவழி கடல் வழி
சாலையில்  தன்  உயிர்
வழி தந்த ஆட்சியில்

அணையா      விளக்காய்
அமைதியின்   சொருபமாய்
உறங்குகிறாய்  நம் அன்னை மடியில்......!!!


                                                                                                                  சி.பொன்செல்வி
                                                                                                                   12th -B..


கர்ம வீரர் காமராஜர்

அரச  குடும்பத்தில்  பிறக்கவில்லையென்றாலும்  அரசாண்டவர் ,

 விருதுநகரிலே  பிறந்து - பல விருதுகளை  வாங்கிக் குவித்தவர்,

படித்துப்  பட்டம்  பெறவில்லை - ஆனால்  எண்ணில்லடங்காப் பட்டங்களுக்குச் சொந்தகாரர் ,
உள்நாட்டை  அதிகம்  நேசித்ததாலோ - அவரின் பெயரில் சென்னை  உள்  நாட்டு  விமான நிலையம்!
கஞ்சிக்  குடிக்க வழியில்லையென்றாலும் - பல மொழிகளைக் கரைத்துக்   குடித்தவர்.
கர்மமே  தனது  குறிக்கோள்  எனப்  போராடியதால்  அவர் கர்மவீரர் ,
               ''ராசா''   சிறுவயதில் தாயார்  அன்பாக  அழைத்தது,
               ''ராஜா''  பெருவயத்தில்  மக்கள்  அன்பாக அழைத்தது .

பிறந்த  குலமோ  நாடார், அதற்கேற்ப  எதையும்  நாடவில்லை,
     அவர்,    தீ யென - யாரையும்  நாடார்,
                     என்றும் - சிறுமைகள்  நாடார் ,
                     வாழ்வில் - மாயங்கள்  நாடார் ,
                     வெற்று  - மந்திரங்கள்  நாடார் ,
                     வரட்டு  - வார்த்தைகள்  நாடார் ,

வாழ்க்கைப்   பாதையோ ,
                          ஒன்றே  மணம் ,
                          ஒன்றே  எண்ணம் ,
                          ஊருக்கே  வாழ்ந்த  வாழ்கை,
                          திருமணம்  அறியாதவர் , பருவம், காதல், பாசம் - மறந்து,
                          சீராட்டிப் , பாராட்டிய  தாய்  தவிர சொந்தம் என்று  சொல்ல                                               யாருமில்லை , துணையிருக்க  மங்கையுமில்லை ,
                          மணிமண்டபங்கள்  தோட்டங்கள்  ஏதுமில்லை ,
                          பொதுவாழ்விலோ  நேர்மை , தூய்மை .
                          தனக்கு கிடைக்காத  கல்வி  தமிழ்நாட்டுப்
                          பிள்ளைகளுக்குக்   கிடைக்க  ஊர்  ஊராய்  பள்ளிகள் .


               ஏதுமறியாதவன் ஆடுகிறான் ,
               எல்லாம் அறிந்தவன் அடங்கிக் கிடக்கிறான், என்பதற்கு
               எடுத்துக் காட்டாய்   விளங்கியவர்  காமராசர்
           
               இல்லாமை  இல்லாத  சமுதாயத்தை  உருவாக்கி
               மக்கள் மனதில் என்றும்  வாழ்பவர்  காமராசர்.



                                                                                                       பி.வெ .கணேஷ் .
                                                                                                         12th - B.


                                                                                                             
                         




கர்ம வீரர் காமராஜர்

வெள்ளைக் கதருக்குள்
கருப்பாய் ஒரு
பச்சைத் தமிழன்!

நீ கல்விச் சாலையில் கற்றதோ
கை மண்ணளவு! - ஆனால்
கல்விச் சாதனையில்
கடந்ததோ  கடலளவு!

விருது நகரின் விழுது!
வெள்ளந்தி மனது!

நீ சம்சாரக் கடலில்
மூழ்காத கட்டை பிரம்மசாரி!

 பந்தமும் இல்லை!  -  உன்னிடம்
பந்தாவும் இல்லை!

நீ
ஏழைக் குழந்தைகளுக்குக்
கூட்டானவன்! - ஆனால்
ஏட்டுச் சுரைக்கய்களுக்கு
வேட்டானவன்!

பல அணைகளைப்
பரிசாகத் த்தந்தவன்! - பல
பாலங்கள் கட்டத் தானே
பாலமாய் இருந்தவன்!

அறம் பேசிய உன் வாய்
புறம் பேசியதில்லை!
அடுக்கு மொழி அறியா உன் நாக்கு - என்றும்
தடம் புரண்டதில்லை!

வெட்டும் துண்டும் உன்
வார்த்தையில் மட்டும் தான்!
வாழ்க்கையில் இல்லை!

நீ
செவிக்கும் வயிற்றுக்கும்
சேர்த்தே ஈய்ந்தவன் !
சமூக நீதிக்கே சருக்காய்த் தேய்ந்தவன்!

உன்னிடம்
வார்த்தை ஜாலமும் கிடையாது !
உனக்கு
வாரிச் சுருட்டவும்  தெரியாது!

நீ
விடியலுக்கு வித்து!
விண்ணுக்கு சொத்து!

நீ
கையூட்டு பெறும்
அரசியல்வாதிகள்
தொடக்கூடாத கையேடு!

நீ
ஒரு நாளும்
தலை தாழ்ந்ததில்லை!
அதனால் தானோ என்னவோ
உம்மைத் தோற்கடிக்க நாங்கள்
இன்னமும் தலை நிமிரவே இல்லை!

             மோ.தாரணி                                                     
பனிரெண்டாம் வகுப்பு - ஆ பிரிவு                             
எஸ்.ஆர்.எம் நைட்டிங்கள் மெட்ரிக் மேனிலைப் பள்ளி.
சென்னை - 600 033                                           



கர்மவீரர் காமராஜர் பிறந்த தினம் - இன்று

உன் பெயரோ காமராஜ் !
நீயோ தமிழ் நாட்டின் சாம்ராட்!
கருணையில் நீ ஒரு புத்தர் - உன்
தொலைநோக்கிலோ நீ ஒரு சித்தர்!
முன்னேற்றம் பலவிற்கும்  நீயே காரணகர்த்தர்.
ஏழை மனக்குறிப்பறியும் நல வித்தகர்  
நீ பிறந்ததோ ஜூலை பதினைந்து
சேவைகள் பல செய்தாய் மனமுவந்து!
உன் சேவைகளை நினைந்து
உன் மேல் பாட வந்தேன் சிந்து!
மக்கள் நலன் பல விழைந்து
அவரின் துயர் பல கலைந்து
வெளியிட்டாய் பல ஜி.ஒ.
பட்டறிவால் அறிந்தாய் Geo
அதனால் உண்டானது பல அணை
கடவுள்போல் மக்களுக்கானாய் துணை!
ஐம்பூதங்களிலும் உன் ஆட்சி!
விண்ணைத் தாண்டும் உன் மாட்சி!
நீரை அடக்கினாய் அணையினால்!
மின் சக்தி பெற வைத்தாய் அனலினால்!
காற்றில் கலந்த சுகந்தமானாய்  !
நிலத்திலடங்கினாலும் விண்ணுக்கு ஒப்பானாய்!
வாழ்த்த வேண்டிய அவசியமில்லை!
தன்னால் வளர்கிறது உன் புகழ்!
நெஞ்சம் நிமிர்ந்திடத் திகழ்!
என்றென்னை வாழ்த்திட வேண்டும் உன் இதழ்!
உன் வழியில் என்றும் நாங்கள்
வளர்ந்து வாழ்ந்திட வேண்டும் பல காலங்கள்!
வாழ்த்துவாய் எம்மை!
வளர்த்துவோம் உம் பெருமை!
சொல்லிலடங்கா உன் சேவைகளை
பட்டியலிட முயன்று
முடியாததால் முடிக்கின்றேன் நான் முத்தாரம்!





Sunday, 12 July 2015

World Population Day - 11-07-2015

உலக மக்கள் தொகை தினம் - 11-07-2015
உலகில் பெருகிவரும் மக்கள் தொகையை கட்டுப்படுத்துவதற்கு குடும்ப நலத்திட்டங்கள், மக்கள் தொகைப் பெருக்கத்தினால் உருவாகும் சமூகப்பொருளாதாரப் பிரச்சினைகள் மற்றும் கருத்தடை முறைகள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு 1987 ஆம் ஆண்டு முதல் ஐக்கிய நாடுகளினால் ஒவ்வொரு ஆண்டும் இதே நாளில்(ஜூன்-11), மக்கள் தொகை தினத்தை அனுசரித்துவருகிறது. சீனா, இந்தியா, வங்க தேசம், எத்தியோப்பியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளில் மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் வேகமாக அதிகரிப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. கட்டுப்பாடற்ற மக்கள் தொகை வளர்ச்சியானது, குடிநீர், உணவுப் பற்றாக்குறை, இட நெருக்கடி, சுகாதாரம் இன்மை, வேலையின்மை போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது. 1840-ஆம் ஆண்டு நூறு கோடியாக இருந்த மக்கள் தொகை, 1927-ஆம் ஆண்டு 200 கோடியாகவும், 1960-ஆம் ஆண்டு 300 கோடியாகவும், 2011-ஆம் ஆண்டு 700 கோடியாக பெருகி தொடர்ந்து வளர்ச்சி அடைந்து கொண்டே இருக்கிறது. எதிர்காலத் தலைமுறையின் நல்வாழ்வினை மனதில் கொண்டு ஒவ்வொரு நாடும் மக்கள் தொகை வளர்ச்சி விகிதத்தை கட்டுப்படுத்த தொடர்ந்து திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
நன்றி :- https://www.facebook.com/yenipathipagam?fref=ts


Wednesday, 1 July 2015

Happy Doctor's Day


Doctors are 
next to God 
giving helping hand 
in saving people 
from disease 
with kind and care.
We wish them
A Happy Doctor's Day

   Image result for happy doctors day quotes

 Image result for happy doctors day quotes

தேசிய மருத்துவர் தினம் இன்று


                                     டாக்டர்களின் தன்னலமற்ற சேவையினைப் போற்றும் விதமாகவும், டாக்டர் பி.சி ராயின் அர்ப்பணிப்பு உணர்வு, பொதுச் சேவை, ஈகை குணம் ஆகியவற்றின் நினைவாகவும் அவரின் பிறந்த நாளான இன்று நம் நாட்டில் தேசிய மருத்துவர் தினம் கொண்டாடப்படுகிறது. ராய் பீகார் மாநிலம் பாட்னா அருகே உள்ள பாங்கிபோர் எனும் ஊரில் 1882-ஆம் ஆண்டு ஜூலை 1-இல் பிறந்தார். கொல்கத்தாவில் மருத்துவப் பட்டம் பெற்று லண்டனில் MRCP மற்றும் FRCS படிப்பை முடித்து இந்தியாவிற்குத் திரும்பி ஏழை எளிய மக்களுக்கு மருத்துவ சேவை செய்தார். அந்நாட்களில் நடந்த காந்தியடிகளின் ஒத்துழையாமை இயக்க போராட்டங்களிலும் பங்கெடுத்துள்ளார். இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். 1948-ஆம் ஆண்டு மேற்கு வங்க மாநிலத்தின் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார். முதலமைச்சர் பணியிலிருந்தாலும் தன் மருத்துவ சேவையினை தொடர்ந்து செய்து வந்தார். 1961-ஆம் ஆண்டு இவரது மருத்துவ சேவையைப் பாராட்டி இந்தியாவின் உயரிய குடிமை விருதான பாரத் ரத்னா விருது வழங்கி இந்திய அரசு கௌரவித்தது. இந்தியாவின் மக்கள் தொகை விகிதத்திற்கு ஏற்ப மருத்துவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது. இருப்பினும் அரசுப் பொது மருத்துவ மனைகளிலும், மருத்துவ முகாம்கள் அமைத்தும், அவ்வப்போது பரவும் நோய்களைப் பற்றி விழிப்புணர்வு செய்வதுடன் நேரம் கருதாது மக்களுக்கு மருத்துவ சேவை ஆற்றும் மருத்துவர்கள் போற்றப்பட வேண்டியவர்கள் ஆவர்.



 நன்றி : -  https://www.facebook.com/yenipathipagam