Tuesday 15 September 2015

அறிஞர் அண்ணா பிறந்த நாள் இன்று

அறிஞர் அண்ணா பிறந்த நாள் இன்று (செப்டம்பர் 15 1909)
ஒரு முறை நேரு தமிழகம் வந்திருந்த போது பள்ளிக்கூடம் ஒன்றிற்குச்

சென்று உரையாற்றினார்.  நேரு ஆங்கிலத்தில் உரையாற்ற,
மொழிபெயர்ப்பாளர் அதைத் தமிழில் மொழிபெயர்த்தார். ஒரு கட்டத்தில்
நேருவேறு யாராவது மொழிபெயர்க்கிறீர்கள எனக் கேட்டார். அப்போது அங்கிருந்தபள்ளி மாணவர்களில் ஒருவன் எழுந்து சென்று அவருடைய
பேச்சை மொழிபெயர்த்தான்.
அம்மாணவன் தான் பின் நாளில் அறிஞர் 
அண்ணா!
அறிஞர் அண்ணா அமெரிக்க நாட்டின் யேல் பல்கலைக்கழகத்திற்குச்
சென்றிருந்தார். அப்போது அங்குள்ளமாணவர்களிடம் உரையாடினார்.
உரையாடலின் இடையே ஒரு மாணவர் எழுந்து 'தாங்கள் ஆங்கிலத்திலும்
வல்லவர் என்று தெரியும். ஆங்கிலஎழுத்துகளான ‘A,B,C,D’ ஆகிய
நான்கு எழுத்துகளும் வராத நூறு வார்த்தைகளைக் கூற
முடியுமா?' எனக் கேட்டார்.உடனடியாக விடையளித்தார் அறிஞர்
அண்ணா. வியப்பாக இருக்கிறதாஒன்று முதல் தொண்ணூற்று ஒன்பது வரையிலான எண்களை ஆங்கிலத்தில் சொன்னார்
அவர். நூற்றை ஆங்கிலத்தில்சொன்னால் அதில் ’D’ என்னும்
எழுத்து வந்து விடும் என எல்லோரும் எதிர்பார்த்திருந்த போது 'STOP' எனக்
கூறி நிறைவு செய்தார்ஒருமுறை அறிஞர் அண்ணாவிடம்
'பிகாசு'(Because) என்னும் ஆங்கிலச்சொல் மூன்றுமுறை வருமாறு ஓர் ஆங்கிலச் சொற்றொடர் கூறுமாறு கேட்டார்கள்உடனடியாக அண்ணா சொன்னார் - “No
sentence ends with because because
‘Because’ is a conjunction”.
இதற்கும் மேல் அறிஞர் அண்ணாத்துரை அவர்கள் ஓர் தமிழ்
தேசியவாதி , தமிழ் அறிஞர். 

No comments:

Post a Comment