Saturday 25 July 2015

கார்கில் போர் வெற்றி தினம் இன்று


கார்கில் போர் வெற்றி தினம் இன்று


                      இந்தியாவின் ஜம்மு காஷ்மிர் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள கார்கில், திரஸ் பகுதியின் மலைச் சிகரங்கள், படாலிக் மற்றம் சோர்பாட்லா போன்ற பகுதிகளில் எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டைத் தாண்டி பாகிஸ்தான் ராணுவம் மற்றும் தீவிரவாதிகள் கூட்டாக ஒன்று சேர்ந்து 1999-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஊடுருவினர். ஜம்மு காஷ்மிர் மாநில எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டின் சில இடங்களில் குளிர் காலத்தின் போது சில மாதங்களுக்கு இரு நாடுகளின் தரப்பிலும் எல்லைப் பாதுகாப்பு படை தற்காலிகமாக விலக்கிக் கொள்ளப்படும். பாகிஸ்தான் ராணுவமும் தீவிரவாதிகளும் அந்த சமயத்தை பயன்படுத்தி இந்திய எல்லையைச் சேர்ந்த சிகரங்களை ஆக்கிரமித்தனர். இந்திய ராணுவம் ”ஆப்பரேஷன் விஜய்” என்ற பெயரில் ராணுவ நடவடிக்கை எடுத்தது. மலை முகடுகள் மற்றும் சிகரங்களில் போர் நடந்ததால் இந்திய ராணுவத்திற்கு படைத்தளவாடங்களைக் கொண்டு செல்ல கடினமாக இருந்தது. “ஸ்ரீநகர்“ மற்றும் “லே“ பகுதியை இணைக்கும் NH-1D தேசிய நெடுஞ்சாலையை மிகவும் உயரமான பகுதிகளிலிருந்து பாகிஸ்தான் படையினர் தாக்கினர். இந்தியப் படையினர் முன்னேறிச் செல்வது பெரும் சவாலாக இருந்தது. இந்திய வான் படை மே மாதம் 26-ல், MIG-21, MIG-27, MI-17 போர் விமானங்கள் மூலமாக சிகரங்களின் உச்சியில் பதுங்கியிருந்த பாகிஸ்தான் படையினரை தாக்கியது. இந்திய ராணுவம் ஜூன் 29-ல் டைகர் ஹில்ஸ் மலைப்பகுதிக்கு அருகில் அமைந்துள்ள பாய்ண்ட் 5060 மற்றும் 5100 மலைச் சிகரங்களை கைப்பற்றியது. ஜூலை 4-ல் முக்கிய சிகரமான டைகர் ஹில்சை தொடர்ச்சியாக 11 மணி நேரத் தாக்குதலுக்குப்பின் மீட்டது இந்திய ராணுவம். இரண்டு மாதமாக நடந்தப் போரில், இந்திய வீரர்கள் தீரத்துடன் போரிட்டு பாகிஸ்தான் படையினரை முழுமையாக இந்திய எல்லையிலிருந்து விரட்டியடித்தனர். ஜூலை-26 போர் முடிவுற்றது. இந்நாளினை “கார்கில் வெற்றி தினமாக“ நாட்டிற்காக தங்கள் இன்னுயிரை நீத்த ராணுவத்தினர் ஒவ்வொருவரின் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் இதே நாளில்(ஜூலை-26) இந்திய அரசு கார்கில் தினத்தை அனுசரிக்கிறது.

Significance of July 24

One of the talented PM we had....
In 1991, when India faced severe economic crisis, PM P.V. Narasimha Rao appointed apolitical Manmohan Singh as Finance Minister. India's foreign reserves barely amounted to US$1 billion, enough to pay for a few weeks of imports.
By 1994, when he presented his historic budget, the economy was well on its way to recovery. Yet he ploughed ahead instituting deep changes in the institutions of the country.
During his speech in Parliament while presenting the Budget in 1994-95, he quoted Victor Hugo: "No power on earth can stop an idea whose time has come."
His dream was that in a crisis India should undertake basic structural changes, which would lead to the emergence of a new country that would become a major global player in the world economy.
Singh started the process of simplification and rationalisation of the tax system. Many controls and regulation on the industry were removed, which meant the death of the Permit Raj and a free rein to entrepreneurs.
The result was that productivity in the Indian industry grew like never before.

ஆண்டு விழா 2015

                             சென்னை மேற்கு மாம்பலம் - எஸ்.ஆர்.எம். நைட்டிங்கேல் பள்ளியின் 47-ஆவது ஆண்டு விழா தி. நகர் கிருஷ்ண கான சபாவில் மாலை 4.00 மணி அளவில் திரு.நடராஜ்-முன்னாள் காவல் துறை ஆணையர் அவர்கள் தலைமை வகிக்க, புலவர் மா.இராமலிங்கம் அவர்கள் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்க, பள்ளித் துணைத் தாளாளர் சி.நிரஞ்சன் மற்றும் பள்ளி அங்கத்தினர்கள் முன்னிலை வகிக்க இனிதே அரங்கேறியது. 


                                        வந்தோரை வரவேற்கும் வண்ணம் வரவேற்புரை பள்ளித் துணை முதல்வர் அவர்களால் நவிலப்பட்டது., மகிழ்விக்க வரவேற்பு நடனம் கடவுளின் திருப்பெயரால் 6, 7, 8 வகுப்பு மாணவர்களின் பங்கேற்புடன் அரங்கேறியது. பின்பு மேடைக்கு அழைக்கப்பட்ட விருந்தினர்கள் கைகளால் குத்து விளக்கேற்றப் பட்ட பின்  நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்கள். தலைமை விருந்தினர் தம் உரையில் கல்வியின் பெருமையை முன்னிறுத்தி பேசினார். மாணவர்களுக்கு கல்வி என்பது களவாடப் பட முடியாத ஒன்று என்றும், கேடில் விழுச் செல்வம் கல்வி என்றும் வலியுறுத்தினார். அவர் பள்ளி முதல் மதிப்பெண் எடுத்த மாணவர் என்பதும் மாணவர்களுக்கு முன் மாதிரியை எடுத்துக் காட்டியது. முதுகிற்குப் பின்னால் இருந்து செய்யப்பட வேண்டிய ஒரே காரியம் தட்டிக் கொடுத்தல் மட்டுமே. அதனை மிகச் சரியாகச் செய்யும் வண்ணம் முந்தைய கல்வியாண்டின் தேர்ச்சியில் முதன்மை இடம் வகித்த மாணவ மணிகளுக்கும், 10 மற்றும் 12-ஆவது வகுப்பில் முதன்மை மற்றும் 100% மதிப்பெண் பெற்ற மாணவ மணிகளுக்கும், அதற்குத் முதல் பொறியாய் உதவிய ஆசிரியரர்களுக்கும், சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கி கௌரவித்தது. 

                                         கையசைவும், காலசைவும், தலையசைவும், அசைவின்றி நிற்றலும் கூட மழலையிடம் அழகு. அம்மழலைகள் மக்களின் மனங்களை அசைத்துப் பார்க்கும் வண்ணம் ஆடிய ஜப்பானிய விசிறி நடனம் அனைவரின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றது.  தேசிய அளவில் மக்கள் மனங்களை உலா வரச் செய்யும் வண்ணம் நிகழ்த்தப்பட்ட நடனம் மிகச் சிறப்பாக இருந்தது. அதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட ஆங்கில மொழி நாடகம் மாணவர்களின் தனித் திறமையை  கட்டியமிட்டுக் கூறியது. 

                                          அனைத்திற்கும் முத்தாய்ப்பாக மவுன மொழி நாடகமாக பெண் கல்விக்கு ஆதரவாக, பெண் அடிமைக்கு எதிராக  பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள் பாத்திரங்களாக மாறி மேடையில் வசனமின்றி வாழ்ந்து காட்டியது காண்போர் மனங்களை நெகிழ்த்தியது. அதனைத் தொடர்ந்து மேடை ஏறிப் பேசிய புலவர் மா.இராமலிங்கம் அவர்கள் தம் உரைக்கு முதல் நுனியாக எடுத்துப் பேசும் வண்ணம் அம்மௌனப் புரட்சி அமைந்திருந்தது எனலாம். சற்றே சல சலத்த கூட்டத்தை தம் கலகலப்பான நகைச்சுவைப் பேச்சால் காவன ஈர்ப்பு செய்தார்.சிந்திக்கத் தூண்டியது அவரது சிரிப்பான பேச்சு. அவரது சிரி(ற)ப்பான பேச்சின் சில முத்தான சத்தான விசயங்கள் இதோ!

  • குழந்தைகள் காரியமே கண்ணானவர்கள் ஜப்பானிய நடனம் ஆடிய குழந்தைகளில் ஒன்று தன் கொண்டை அவிழ்ந்ததைக் கூடக் கண்டு கொள்ளாமல் ஆடியது. 
  • பூர்வ ஜென்ம புண்ணியம் என்ற ஒன்று இருந்தால் மட்டுமே பெண் பிள்ளைகளுக்குப் பெற்றோராக இயலும் என்ற அவரின் ஒரு வார்த்தைக்கு அரங்கம் நிறைந்த கரகோஷம் எழும்பியது.
  • நல்லப் படிக்கிறவன் நல்லவன், நல்லாப் படிக்க முடியாதவன் ரொம்ப ரொம்ப நல்லவன், ஏன்னா அவனிடமும் ஒரு திறமை இருக்கும், அதை வெளிக் கொணர்வது  பெரும்பாலும் ஆசிரியரே! - என்ற அவரின் பேச்சுகளுக்கு எழுந்த கைத்தட்டலுக்கு அரங்கமே அதிர்ந்தது.  
  • எந்த மொழியை வேண்டுமானாலும் கற்றுக் கொள்ளுங்கள். இந்தி கற்றால் இந்தியா முழுதும் சுற்றலாம். ஆங்கிலம் கற்றால் உலகையே சுற்றலாம். எந்த மொழி கற்றாலும் வீட்டுக்குள் வந்தால் அம்மாவை அம்மா என்றும் அப்பாவை அப்பா என்றும் அழையுங்கள். அ என்பது உயிரெழுத்து, ம் என்பது பத்தாவதாக வருகின்ற மெய்யெழுத்து, மா என்பது உயிரும் மெய்யுமாகக் கலந்த உயிர் மெய்யெழுத்து. உயிரைத் தன்னுள் வாங்கி, பத்து மாதங்கள் தம் வயிற்றில் சுமந்து உடலாக்கி, உயிர்மெய்யாக வெளி உலகுக்குத் தரும் தாயை உயிர்ப்பான அம்மா என்று அழைப்பதை விடுத்து, (புதை குழிக்குள் இருக்கும் சவம்)மம்மி அழைப்பதை விட்டு விடக் கூறினார். 
  • மாதா, பிதா, குரு தெய்வம் என்பதை ஆழமாக வலியுறுத்தினார். தன் பிள்ளைக் கிறுக்கலையும் கவிதை என எண்ணும் தாய்மையும், இடுப்பிலேற்றி உணவூட்டும் போதே பகிர்ந்துண்ணக் கற்றுக் கொடுக்கும் தாயும்,  தான் காணா உலகை நீயாகிலும் காண் என்று தோளில் சுமக்கும் தந்தையும், இடுப்பிலும் அல்லாமல் தோளிலும் இல்லாமல் சுய காலில் நிற்கக் கற்றுத்தரும் ஆசிரியரும் தெய்வத்திற்குச் சமமென மதிக்க வேண்டும். 
  • சீரியல் பார்ப்பதை விடச் சொல்லித் தாய்மார்களுக்கு அவர் விடுத்த வேண்டுகோள் மிக முக்கியமானது. 
  • செல்போன் இந்த கால கட்டத்தில் பெரும்பாலானவரை மதி மயக்கியே வைத்துள்ளது. உதாரணத்திற்கு பெண் ஒருவர் தன் போனில் husband1 , husband2 எனத் தன் கணவரின் இரு நம்பர்களை பதிவு செய்து இருப்பது எவ்வளவு அபத்தமான அர்த்தத்தைக் காண்பிக்கிறது என அவர் கூறிய கூற்றிற்கு அரங்கமே குலுங்கியது, சிரிப்பால்.  Tower கிடைக்கவில்லை என டிவி ரிமோட்டை தூக்கிய நபர்களும் இருக்கிறார்கள் என்பது உண்மைதானே. 
  • மாணவர்கள் பல நேரங்களில் தவறான பதில் எழுதினாலும், தான் பல நேரங்களில் அதை ரசித்ததாகக் கூறினார். உதாரணத்திற்கு"ராஜா ராம் மோகன் ராய் பற்றி எழுதுக என்ற வினாவிற்கு "அவர்கள் நால்வரும் நல்ல நண்பர்கள் என்ற பதிலை அபத்தமான பதிலென்றாலும் ரசித்ததாகக் கூறினார். 



  •  


                                                 













Annual day 2015


              

SRM NIGHTINGALE MAT.HR.SEC.SCHOOL celebrated its 47th Annual day on 24th July 2015 at Krishna gana sabha, T.Nagar, Chennai. The function was presided by the Chief guest Mr.R.Nataraj, Former Director General of Police, Tamilnadu  and guest of honour Pulavar M.Ramalingam. 
CO Chairman and other SRM dignitaries were present during the celebration
The function started at 4.00 pm with the welcome dance by the dance club students followed by Japanese fan dance by the tiny tots on the theme “ one world one earth”. The evening was made more colourful with cultural programmes after the principal’s annual report . Important activities of the school were  displayed through TV.
                Mr.R.Nataraj, specified the importance of identifying  unique skill in every child and develop them as per the talent they possess. Pulavar Ramalingam stressed the role of parents and teachers in the individual development through his humorous talk. Audience spell bound with the way pulavar delivered his thought.
                Top scorers of X and XII board examination and centum scorers in each subject were awarded with books, certificates and medals. Teachers were also awarded for their exemplary service.  
                Students gave their performances with grace and got a big round of applause which included the dance of India and mime on Women empowerment.
                Programme ended with Vote of thanks and National anthem.

Friday 17 July 2015

Logo Quiz

மாண்புமிகு முந்திரி

17.07.2015 - World Day for International Justice

Image result for justice day
World Day for International Justice, also referred to as Day of International Criminal Justice or International Justice Day is celebrated throughout the world on July 17 as part of an effort to recognize the emerging system of international criminal justice. July 17 was chosen because it is the anniversary of the adoption of the Rome Statute, the treaty that created the International Criminal Court. On 1 June 2010, at the Review Conference of the Rome Statute held in Kampala (Uganda), the Assembly of State Parties decided to celebrate 17 July as the Day of International Criminal Justice. 

Each year, people around the world use this day to host events to promote international criminal justice, especially support for the International Criminal Court. The day has been successful enough to attract international news attention, and for groups to use the day to focus attention on particular issues such as genocide in Darfur, Falun Dafa, and serious crimes of violence against women. 


Note : The International Court of Justice (French: Cour internationale de justice; commonly referred to as the World Court or ICJ) is the primary judicial branch of the United Nations. It is based in the Peace Palace in The Hague, Netherlands.

Thursday 16 July 2015

Fun corner

The following is an article from a book "The Candle- Zonal railway Institute Tiruchhirapalli" - which stimulates laughing. But actually it reveals the computer illiteracy of a man. Even we have computer we don't use it proper. If we don't take steps for improving our computer literacy our life incidents with computer will end as comedy. 

Dear Mr. Bill gates,
                This letter is from Banta Singh from Punjab. We have bought a computer for our Home and we found problems, Which  I want to bring to your notice.

1. After connecting to internet we planned to open e-mail account and whenever we fill the form in Hot mail in the password column, only ****** appears, But in the rest of the fields whatever we typed appears, but we face this problem only in password field. We checked with hardware vendor Santa Singh and he said that there is no problem in keyboard. Because of this we open the E-mail account with password *****. I request you to check this as we ourselves do not know what the password is. 

2. We are unable to enter anything enter we click the "shut down" button.

3. There is a button "start" But there is no "stop" button. We request you to check this.

4. We find there is "run" in the menu. One of my friend clicked "run" has ran to Amritsar! So, We request you to change that to "sit", So that we can click that by Sitting.

5. One doubt is that any "Re-Scooter" Available in system? As i find only "Re-cycle", But i own a scooter at my home. 

6. There is "find" button but it is not working properly. My wife lost the door key and we tried a lot for tracing the key with this "find", But it is unable to Trace. I sit a bug??

7. Every night i am not sleeping as i have to protect my "mouse" From CAT, So, i suggest you to provide one DOG to kill that cat.

8. Please confirm when are you going to give me money for winning "HEARTS" (playing cards in Games) And when are you coming to my home to collect your money.

9. My child learnt "Microsoft Word" Now he wants to learn "Microsoft Sentence" so when will you provide that?

Best regards,
Banta Singh




Wednesday 15 July 2015

கர்ம வீரர் காமராஜர்

article by Teachers

கர்ம வீரர் காமராஜர்

                                                  கர்ம வீரர்  காமராஜர்

                           
                                   முழங்கால்  தொடும்  உன்  கைகள் !
                                               
                                               உன்  கொள்கையைப்  பற்றினால்

                                    வான் தொடும்  எங்கள்  கைகள் !

                                                 கருமேகமோ  உன்  முகம்

                                       கறைபடிய  வில்லை  உந்தன்  குணம் !

                                                    சோறு  போட்டு  தந்தாய்  கல்வி

                                      சோர்வதில்லை  தோல்வி கண்டு  நீ  தல்லி !

                                                       கர்ம  வீரர்  காமராஜர்   நீ

                                          என்றும்   தோல்வி  அடைய   பேரரசர் !                        

                                                                                                                          ரா . சந்தியா
                                                                                                                                 X - அ                                       

கர்ம வீரர் காமராஜர்

Article by S.Ajay

கர்ம வீரர் காமராஜர்

விருதுப்பட்டியில் முளைத்த  விதையாய்
வெடித்துச்  சிதறிய மண்ணில்
வேரூன்றிய திங்கள் மகனாய்

எளிமையில் பிறந்து வறுமையில்
பயின்ற கல்வியை ஆறாம்
படை வீட்டில் தடைபட்ட
அறிவுக்  கூட்டைத்  தாண்டி

உழைப்பின் நாயகனாய்
உண்மைத்  தோழனாய் நாடே வீடு
நம் தேசமே குடும்பம் என்று
ஆங்கிலேய அன்பர்களை அறவே ஒழிக்க

அறவழிப் போரும் மதுக்  கடை
மறியலும் தீண்டாமை ஒழிப்பும்
ஒத்துழையாமை இயக்கமும்
நடந்த போரில் தாமும் கலந்து
சிறைப்  பட்ட சிங்கமாய்

ஏழைப்  பங்காளராய்
 ஏழை மாணவர்களுக்கு
விடியும் கல்விக் கண்னை
விதைத்த அறிவுப் பெட்டகமே

நீ படிக்காத மேதையாய்
இருந்தும் பஞ்சம் பசி தீர்த்த
கர்ம வீரராய்  காலம் வைத்த பெயரில்
கருப்பு காந்தியாய் மாறி

அணைகள் பல கட்டி
அகிலம் செழிக்க மனைகள் தோறும்
மண்ணில் கலந்த சிமென்டாய் மாறி
நலமும் வளமும் சிறக்க

காகித ஆலைகள் கட்டி
மக்கள் வளம் உயர
தரைவழி கடல் வழி
சாலையில்  தன்  உயிர்
வழி தந்த ஆட்சியில்

அணையா      விளக்காய்
அமைதியின்   சொருபமாய்
உறங்குகிறாய்  நம் அன்னை மடியில்......!!!


                                                                                                                  சி.பொன்செல்வி
                                                                                                                   12th -B..


கர்ம வீரர் காமராஜர்

அரச  குடும்பத்தில்  பிறக்கவில்லையென்றாலும்  அரசாண்டவர் ,

 விருதுநகரிலே  பிறந்து - பல விருதுகளை  வாங்கிக் குவித்தவர்,

படித்துப்  பட்டம்  பெறவில்லை - ஆனால்  எண்ணில்லடங்காப் பட்டங்களுக்குச் சொந்தகாரர் ,
உள்நாட்டை  அதிகம்  நேசித்ததாலோ - அவரின் பெயரில் சென்னை  உள்  நாட்டு  விமான நிலையம்!
கஞ்சிக்  குடிக்க வழியில்லையென்றாலும் - பல மொழிகளைக் கரைத்துக்   குடித்தவர்.
கர்மமே  தனது  குறிக்கோள்  எனப்  போராடியதால்  அவர் கர்மவீரர் ,
               ''ராசா''   சிறுவயதில் தாயார்  அன்பாக  அழைத்தது,
               ''ராஜா''  பெருவயத்தில்  மக்கள்  அன்பாக அழைத்தது .

பிறந்த  குலமோ  நாடார், அதற்கேற்ப  எதையும்  நாடவில்லை,
     அவர்,    தீ யென - யாரையும்  நாடார்,
                     என்றும் - சிறுமைகள்  நாடார் ,
                     வாழ்வில் - மாயங்கள்  நாடார் ,
                     வெற்று  - மந்திரங்கள்  நாடார் ,
                     வரட்டு  - வார்த்தைகள்  நாடார் ,

வாழ்க்கைப்   பாதையோ ,
                          ஒன்றே  மணம் ,
                          ஒன்றே  எண்ணம் ,
                          ஊருக்கே  வாழ்ந்த  வாழ்கை,
                          திருமணம்  அறியாதவர் , பருவம், காதல், பாசம் - மறந்து,
                          சீராட்டிப் , பாராட்டிய  தாய்  தவிர சொந்தம் என்று  சொல்ல                                               யாருமில்லை , துணையிருக்க  மங்கையுமில்லை ,
                          மணிமண்டபங்கள்  தோட்டங்கள்  ஏதுமில்லை ,
                          பொதுவாழ்விலோ  நேர்மை , தூய்மை .
                          தனக்கு கிடைக்காத  கல்வி  தமிழ்நாட்டுப்
                          பிள்ளைகளுக்குக்   கிடைக்க  ஊர்  ஊராய்  பள்ளிகள் .


               ஏதுமறியாதவன் ஆடுகிறான் ,
               எல்லாம் அறிந்தவன் அடங்கிக் கிடக்கிறான், என்பதற்கு
               எடுத்துக் காட்டாய்   விளங்கியவர்  காமராசர்
           
               இல்லாமை  இல்லாத  சமுதாயத்தை  உருவாக்கி
               மக்கள் மனதில் என்றும்  வாழ்பவர்  காமராசர்.



                                                                                                       பி.வெ .கணேஷ் .
                                                                                                         12th - B.


                                                                                                             
                         




கர்ம வீரர் காமராஜர்

வெள்ளைக் கதருக்குள்
கருப்பாய் ஒரு
பச்சைத் தமிழன்!

நீ கல்விச் சாலையில் கற்றதோ
கை மண்ணளவு! - ஆனால்
கல்விச் சாதனையில்
கடந்ததோ  கடலளவு!

விருது நகரின் விழுது!
வெள்ளந்தி மனது!

நீ சம்சாரக் கடலில்
மூழ்காத கட்டை பிரம்மசாரி!

 பந்தமும் இல்லை!  -  உன்னிடம்
பந்தாவும் இல்லை!

நீ
ஏழைக் குழந்தைகளுக்குக்
கூட்டானவன்! - ஆனால்
ஏட்டுச் சுரைக்கய்களுக்கு
வேட்டானவன்!

பல அணைகளைப்
பரிசாகத் த்தந்தவன்! - பல
பாலங்கள் கட்டத் தானே
பாலமாய் இருந்தவன்!

அறம் பேசிய உன் வாய்
புறம் பேசியதில்லை!
அடுக்கு மொழி அறியா உன் நாக்கு - என்றும்
தடம் புரண்டதில்லை!

வெட்டும் துண்டும் உன்
வார்த்தையில் மட்டும் தான்!
வாழ்க்கையில் இல்லை!

நீ
செவிக்கும் வயிற்றுக்கும்
சேர்த்தே ஈய்ந்தவன் !
சமூக நீதிக்கே சருக்காய்த் தேய்ந்தவன்!

உன்னிடம்
வார்த்தை ஜாலமும் கிடையாது !
உனக்கு
வாரிச் சுருட்டவும்  தெரியாது!

நீ
விடியலுக்கு வித்து!
விண்ணுக்கு சொத்து!

நீ
கையூட்டு பெறும்
அரசியல்வாதிகள்
தொடக்கூடாத கையேடு!

நீ
ஒரு நாளும்
தலை தாழ்ந்ததில்லை!
அதனால் தானோ என்னவோ
உம்மைத் தோற்கடிக்க நாங்கள்
இன்னமும் தலை நிமிரவே இல்லை!

             மோ.தாரணி                                                     
பனிரெண்டாம் வகுப்பு - ஆ பிரிவு                             
எஸ்.ஆர்.எம் நைட்டிங்கள் மெட்ரிக் மேனிலைப் பள்ளி.
சென்னை - 600 033                                           



கர்மவீரர் காமராஜர் பிறந்த தினம் - இன்று

உன் பெயரோ காமராஜ் !
நீயோ தமிழ் நாட்டின் சாம்ராட்!
கருணையில் நீ ஒரு புத்தர் - உன்
தொலைநோக்கிலோ நீ ஒரு சித்தர்!
முன்னேற்றம் பலவிற்கும்  நீயே காரணகர்த்தர்.
ஏழை மனக்குறிப்பறியும் நல வித்தகர்  
நீ பிறந்ததோ ஜூலை பதினைந்து
சேவைகள் பல செய்தாய் மனமுவந்து!
உன் சேவைகளை நினைந்து
உன் மேல் பாட வந்தேன் சிந்து!
மக்கள் நலன் பல விழைந்து
அவரின் துயர் பல கலைந்து
வெளியிட்டாய் பல ஜி.ஒ.
பட்டறிவால் அறிந்தாய் Geo
அதனால் உண்டானது பல அணை
கடவுள்போல் மக்களுக்கானாய் துணை!
ஐம்பூதங்களிலும் உன் ஆட்சி!
விண்ணைத் தாண்டும் உன் மாட்சி!
நீரை அடக்கினாய் அணையினால்!
மின் சக்தி பெற வைத்தாய் அனலினால்!
காற்றில் கலந்த சுகந்தமானாய்  !
நிலத்திலடங்கினாலும் விண்ணுக்கு ஒப்பானாய்!
வாழ்த்த வேண்டிய அவசியமில்லை!
தன்னால் வளர்கிறது உன் புகழ்!
நெஞ்சம் நிமிர்ந்திடத் திகழ்!
என்றென்னை வாழ்த்திட வேண்டும் உன் இதழ்!
உன் வழியில் என்றும் நாங்கள்
வளர்ந்து வாழ்ந்திட வேண்டும் பல காலங்கள்!
வாழ்த்துவாய் எம்மை!
வளர்த்துவோம் உம் பெருமை!
சொல்லிலடங்கா உன் சேவைகளை
பட்டியலிட முயன்று
முடியாததால் முடிக்கின்றேன் நான் முத்தாரம்!





Sunday 12 July 2015

World Population Day - 11-07-2015

உலக மக்கள் தொகை தினம் - 11-07-2015
உலகில் பெருகிவரும் மக்கள் தொகையை கட்டுப்படுத்துவதற்கு குடும்ப நலத்திட்டங்கள், மக்கள் தொகைப் பெருக்கத்தினால் உருவாகும் சமூகப்பொருளாதாரப் பிரச்சினைகள் மற்றும் கருத்தடை முறைகள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு 1987 ஆம் ஆண்டு முதல் ஐக்கிய நாடுகளினால் ஒவ்வொரு ஆண்டும் இதே நாளில்(ஜூன்-11), மக்கள் தொகை தினத்தை அனுசரித்துவருகிறது. சீனா, இந்தியா, வங்க தேசம், எத்தியோப்பியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளில் மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் வேகமாக அதிகரிப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. கட்டுப்பாடற்ற மக்கள் தொகை வளர்ச்சியானது, குடிநீர், உணவுப் பற்றாக்குறை, இட நெருக்கடி, சுகாதாரம் இன்மை, வேலையின்மை போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது. 1840-ஆம் ஆண்டு நூறு கோடியாக இருந்த மக்கள் தொகை, 1927-ஆம் ஆண்டு 200 கோடியாகவும், 1960-ஆம் ஆண்டு 300 கோடியாகவும், 2011-ஆம் ஆண்டு 700 கோடியாக பெருகி தொடர்ந்து வளர்ச்சி அடைந்து கொண்டே இருக்கிறது. எதிர்காலத் தலைமுறையின் நல்வாழ்வினை மனதில் கொண்டு ஒவ்வொரு நாடும் மக்கள் தொகை வளர்ச்சி விகிதத்தை கட்டுப்படுத்த தொடர்ந்து திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
நன்றி :- https://www.facebook.com/yenipathipagam?fref=ts


Wednesday 1 July 2015

Happy Doctor's Day


Doctors are 
next to God 
giving helping hand 
in saving people 
from disease 
with kind and care.
We wish them
A Happy Doctor's Day

   Image result for happy doctors day quotes

 Image result for happy doctors day quotes