Monday 5 October 2015

05.10.2015 - வள்ளலார் பிறந்த நாள்


  • “வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்“ என்று பாடிய வள்ளலார் அவர்கள் 1823-ஆம் ஆண்டு அக்டோபர் 5ல் சிதம்பரத்தின் அருகே மருதூரில் பிறந்தார்.
  •  இயற்பெயர் இராமலிங்க அடிகளார் ஆவார். தூய்மையான பக்தி நெறியையும், இறை உணர்வையும் வெளிப்படுத்தும் திருவருட்பாவை அருளியவர் வள்ளலார். 
  • சமுதாய நல்லிணக்கத்திற்காக சத்திய ஞான சபையையும், ஜீவ காருண்யமாகிய ஏழைகளின் பசியினைப் போக்க சத்திய தர்ம சாலையையும் நிறுவியவர். 
  • வள்ளலாரின், போதனைகளில் சில…
    •  “அனைத்து உயிர்களும் நமது உறவுகளே, எந்த உயிரையும் துன்புறுத்தல் கூடாது.” 
    • ”இன வேறுபாடு கூடாது”
    • ”இறைவன் அருட்பெருஞ் ஜோதியாவார்”
    • ”பசித்தவர்களுக்கு உணவளிக்க வேண்டும்”
    • ”நிழல் தரும் மரங்களை அழித்தல் கூடாது”
    • ”தாய் தந்தையின் சொல்படி நட”.

No comments:

Post a Comment